கட்பிட்டி – குரக்கன்ஹேன பகுதியில் முன்னெடுக்கபட்ட விசேட சுற்றிவலைப்பின் போதே குறித்த 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் நிறுத்திவைக்க்பட்டிருந்த லொரியொன்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கைதான 20 ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனும் இவ்வாறு கடற்படையினரால் தடுத்து வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைதீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.