புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2021

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு

www.pungudutivuswiss.com
ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். மீண்டும் 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அதே ஆயிரம்விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றார்

பிறப்பும் பின்னணியும்:

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மார்ச் 1, 1953-ம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரை சூட்டினார் கருணாநிதி. இவரின் மனைவி துர்கா. இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.

கல்வியும் கலையும்:

இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின் விவேகானந்தா கல்லூரியில் பியுசி படிப்பையும் மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தந்தையின் தாக்கத்தால், இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கு நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. இவர் நடித்த முதல் நாடகமான “முரசே முழங்கு” வெற்றிவிழா கண்டது. அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்துள்ளார். இதேபோல, திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், ஒரே இரத்தம், மக்கள் ஆணையிட்டால் ஆகிய திரைப்படங்களிலும் குறிஞ்சி மலர் என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.

அன்று முதலே அரசியலில்:

ஸ்டாலின் தனது 14-வது வயதிலேயே அரசியல் வாழ்க்கையை தொடங்கிவிட்டார். குறிப்பாக தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த 1967 காலகட்டங்களில் பள்ளி மாணவனாக இருந்த ஸ்டாலின், தனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு “கோபாலபுரம் இளைஞர் தி.மு.க” என்ற அமைப்பை ஏற்படுத்தி தலைவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது, சமூகப்பணி செய்வது என மாணவப் பருவத்திலேயே அரசியல் செயல்பாடுகளில் இறங்கிவிட்டார்.

1968-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.கவுக்காகப் பிரசாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து, முதல் கட்சிப் பதவியாக சென்னை 75-வது வட்ட தி.மு.க.வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
1973-ம் ஆண்டு தி.மு.கவின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976-ம் ஆண்டு “மிசா” சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1980-ம் ஆண்டு தி.மு.கவின் இளைஞரணி தொடங்கப்பட்டு அதன் 7 அமைப்பாளர்களில் ஒருவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

1983-ம் ஆண்டின் இறுதியில் தி.மு.கவின் மாநில இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

2008-ம் ஆண்டு தி.மு.கவின் பொருளாளராகப் பொறுப்பேற்றார். அதனைத்தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.


2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

2017-ம் ஆண்டு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடநலத்தை கருத்தில்கொண்டு தி.மு.க பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார்.

2018 திமுக தலைவர் கருணநிதியின் மறைவுக்கு பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ad

ad