புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2021

வடக்கு மாகாண ஆளுநருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்

www.pungudutivuswiss.com
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (12) வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் குறிப்பாக வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வருகின்ற நோயாளிகள் கோடைக் காலத்தில் வெயிலிலும் மழைக் காலங்களில் மழையிலும் நின்று மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த சிரமத்தைத் தனிக்க நடவடிக்கை எடுக்கவும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவும் ஒரு மில்லியன் ரூபாய் நிதி தேவை என்றும் ஏகமனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவை மீண்டும் மறுசீரமைத்து அங்கத்தவர்களை இணைத்து செயல்பாடுகளையும் செயல் படுத்து வேண்டும்.

எனவே குறித்த பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad