ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கேத்தாகொட இராஜினாமா செய்துள்ளார். பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காகவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கேத்தாகொட விலகியுள்ளார்.
இதேவேளை, ஜயந்த கேத்தாகொடவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவி அளிக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.