குறித்த பெண் நேற்று முன்தினம் திகதி மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இதையடுத்து நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பப் பெண் திருமணம் முடித்து ஐந்து வருடங்களாவதுடன், சில நாட்களாக கணவனை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால் வவுனியா பொலிசாருக்கோ அல்லது 0765462984 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார். |