புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2021

பிள்ளையான் கட்சி செயலாளருக்கு பிணை

www.pungudutivuswiss.com
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று பிணை வழங்கியுள்ளது.
கொவிட் 19 அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, இன்று காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று பிணை வழங்கியுள்ளது. கொவிட் 19 அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, இன்று காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரசாந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையில், நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2020.06.08 அன்று, காத்தான்குடி பொலிஸாரால் பிரசாந்தன் கைது செய்யப்பட்டு, சட்டாமாதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

ad

ad