யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சி - கெளதாரி முனை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களுடன் கெளதாரி முனைக்கு சுற்றுலா சென்று கடலில் குளித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
கடலில் மூழ்கியவரை நண்பர்கள் மீட்டு பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இடையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.