புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2021

அராலியில் 3 பிள்ளைகளின் தாய் கொரோனாவுக்குப் பலி!

www.pungudutivuswiss.com
னாவுக்குப் பலி!
[Tuesday 2021-12-14 08:00]


யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

“6 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். நேற்றுமூச்சுத் திணறலுக்குள்ளான அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் குறித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று வைத்தியசாலையினரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த குடும்பப்பெண் கொவிட்-19 தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ad

ad