எஸ்.ரி.ஆர். பிலிம் ஸ்தாபகரான எஸ்ரிஆர் யாழ்ப்பாணத்தின் ராஜா 1, ராஜா 2 மற்றும் சரஸ்வதி சினிமா, அமுதா சினிமா, சுகந்தி சினிமா ஆகிய திரையரங்குகளின் உரிமையாளராவார். இன்று உயிரிழக்கும் போது அவருக்கு வயது 92. திரையரங்குகளில் பெரிய அளவிலான ஓவியங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் பாணியை அறிமுகப்படுத்தியவர் என்பதுடன் சிறந்த ஓவியர்களை ஊக்குவித்தவராகவும் அவர் விளங்கியுள்ளார். எம்.ஜி.இராமச்சந்திரன் (எம்ஜிஆர்) ஐ யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்தவராகவும் அவர் விளங்கியுள்ளார். தமிழரசுக்கட்சியின் மூத்த பிரஜையாகச் செயற்பட்ட அவர் கட்சியின் பொருளாளராகவும் செயற்பட்டுள்ளார். |