அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "புதிய வரைவு தயாரிக்கப்பட்டபோது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கின்றது. இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தைக் கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும். சில ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது. |