உக்கிரைன் கிழக்கு எல்லையில் நிறுத்தி வைத்திருந்த பாரிய டாங்கிகளை அங்கிருந்து அகற்றியுள்ளது ரஷ்யா
. இதனூடாக போரில் இருந்து ரஷ்யா பின் வாங்கி விட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில். அவற்றை பிறிதொரு இடத்திற்கு மாற்றி, அந்த புது இடத்தில் இருந்து தாக்குதலை ஆரம்பிக்கவே ரஷ்யா இவ்வாறு திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க உளவு நிறுவனம் சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது. உக்கிரைன் நாட்டின் ஒரு பகுதியில் நிலை கொண்டு இருந்த பெரும் தொகையான ரஷ்ய டாங்கிகள், ரயிலில் ஏற்றப்பட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதனால் மேலும் பதற்றம் தோன்றியுள்ளது. ஏன் எனில்..ரஷ்யா என்ன செய்கிறது என்று யாருக்கும் புரியவில்லை என்பது தான். டாங்கிகளை ரஷ்யா ஏன் ரயிலில் ஏற்றுகிறது ? அதனை அவர்கள் எங்கே கொண்டு செல்ல முனைகிறார்கள் என்பது எல்லாமே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. ஆதார வீடியோ கீழே இணைப்பு.