புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2022

சுவிஸில் குடியுரிமை தொடர்பில் வெடித்த சர்ச்சை!

www.pungudutivuswiss.com

Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்.

Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்

நாடாளுமன்றத்தின் முடிவு தன்னிச்சையானது, முறையற்றது என்று கூறி நாடாளுமன்றத்தின் முடிவை நிராகரித்த Aargau மாகாண உயர்நீதிமன்றம், அந்த இளைஞருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு, சுவிஸ் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடான விதிகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

குடியுரிமை வழங்கப்படும் நபர் குற்றப்பின்னணி கொண்டவராக இருக்கக்கூடாது என்பது ஒரு நிபந்தனையாகும்.

அத்துடன், எவ்வளவு காலம் ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார், அவரது உள்ளூர் மொழித்திறன் என்ன, அவர் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்தாரா என்பது போன்ற விடயங்களும் முக்கியமானவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad