நாடாளுமன்றத்தின் முடிவு தன்னிச்சையானது, முறையற்றது என்று கூறி நாடாளுமன்றத்தின் முடிவை நிராகரித்த Aargau மாகாண உயர்நீதிமன்றம், அந்த இளைஞருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு, சுவிஸ் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடான விதிகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது. குடியுரிமை வழங்கப்படும் நபர் குற்றப்பின்னணி கொண்டவராக இருக்கக்கூடாது என்பது ஒரு நிபந்தனையாகும். அத்துடன், எவ்வளவு காலம் ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார், அவரது உள்ளூர் மொழித்திறன் என்ன, அவர் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்தாரா என்பது போன்ற விடயங்களும் முக்கியமானவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. |