புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2022

பாதசாரிக் கடவையில் பயிற்சி வாகனம் மோதி பெண் பலி!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி - உமையாள்புரம்  பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி பலியாகியுள்ளார்.
ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த தாயொருவரைப்  பின்னிருந்து வந்த  சாரதி பயிற்சி வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த தாயொருவரைப் பின்னிருந்து வந்த சாரதி பயிற்சி வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது

விபத்தில் உயிரிழந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த முகமது நாசிம் யோகலட்சுமி வயது (69) என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad