புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2022

சிறிதளவும் சுய புத்தி இல்லாமல் சிறிது இலட்சங்களை கொடுத்தால் கனடா போகலாம் என்று பேராசையில் கப்பல் ஏறிய தமிழ

www.pungudutivuswiss.com
 இந்த விஞ்ஞான யுகத்திலும் சாதாரண மீன்பிடி கப்பலில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கனடாவுக்கு சென்று விடலாம் என்று நம்பிய ஏமாளிகளை நினைத்தால் கவலை தான் அவர்களை கனடா அழைக்க வேண்டுமாம் என்று வேறு கோரிக்கை யாழ் போவதா ? இல்லவே இல்லை கனடாவுக்கு கூப்பிடுங்கோ என்று ரகளை செய்யும் கப்பல் அகதிகள்303 இலங்கைத் தமிழர்கள் வியட்நாமில் இருந்து மீன் பிடி கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு. இறுதியில் கப்பல் தண்ணீரில் மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பித்த நிலையில் இறுதியில் மீட்க்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் தற்போது வியட்நாமில் பாதுகாப்பாக உள்ளார்கள். வியட்நாம் அரசு அவர்கள் அங்கே தங்க முடியும் என்று அறிவித்துள்ள நிலையில். நாங்கள் அங்கே தங்க மாட்டோம் என்றும், எங்களை கனடா அரசு உடனடியாக எடுக்கவேண்டும் என்று 303 பேரும் சிறுபிள்ளைத் தனமாக ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். மேலும்…

யாழ்ப்பாணம் திரும்பிச் செல்வது என்பது நடக்கவே நடக்காது என்றும். சென்றால் கடனா தான் என்றும் இவர்கள் அடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். வியட்நாமில் உள்ள இலங்கை தூதுவர்கள் இவர்களைச் சென்று பார்வையிட்ட நிலையில். இவர்கள் இவ்வாறு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். அதனை தாம் கனடா அரசுக்கு அறிவிப்பதாக அதிகாரிகள் கூறி , திரும்பியுள்ளதாக அறிகிறது.

ad

ad