தற்பொழுது அதிளவிலான குடியேற்றவாசிகள் அகதிகளாக ஜரோப்பிய
நாடுகளுக்கு சட்டரீதியற்ற முறையில் சென்று கொன்டு இருக்கின்றனர்.
இதற்கமைய ஆடைகள் மற்றும் இரும்பு கம்பி போன்ற பொருட்களை
ஏற்றிச் சென்ற பாராவூர்தியில் மறைந்திருந்து சட்டவிரோதமாக ஜரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ருமேனிய எல்லையினை கடக்க முற்பட்ட போது எல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொள்கலன் ஒன்றினுல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் வங்காளதேஷ் மற்றும் எரித்தியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மிகுதி 11 பேர் இலங்கையினைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அணைவரும் விசாரணையின் பின்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.