ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் கஜேந்திரன் உரையாற்றும் போது சரத் வீரசேர குறிக்கிட்டு கருத்து தெரிவித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இதன்போதே கஜேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சரத் வீரசேகர போன்ற பச்சை இனவாதிகளை துரத்திவிட்டு முற்போக்காக சிந்திக்க கூடியவர்களை தெரிவு செய்யுமாறு அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார். சரத்வீரசேகரவின் ஆலோசனையை கேட்டபடியாலே மகிந்த மற்றும் கோட்டா ஆகியோர் இன்று தெருவுக்கு வந்துள்ளதை போன்று ஏனையவர்களும் தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்றும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்க நாட்டார் கதைகளில் வருகின்ற மாதன முத்தாவை போன்று சரத் வீரசேகர அடிமுட்டாள் என்றும் கஜேந்திரன் காட்டமாக பதில் வழங்கியிருந்தார். |