புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2023

இணைய மறுக்கும் முன்னணி - சுரேஸ் காட்டம்!

www.pungudutivuswiss.com




தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தமிழ் மக்களின் தேசிய போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தமிழ் மக்களின் தேசிய போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் எமுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாம் தனித்து நிற்பதன் ஊடாக புதிய சாதனைகளை படைக்க முடியும் என்று முயற்சிப்பதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்துக்கு எதிரான பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ள முடியாதெ மறுதலிப்பது ஆரோக்கியமான விடயமாக இருக்காது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளுக்கு மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிரான செயற்பாடாடாவே தாம் இதனை பார்ப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad