புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2023

மிழரசின் மத்திய செயற்குழு! - பலருக்கு ஆப்பு.

www.pungudutivuswiss.com



இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதிகளில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதிகளில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையே பிளவுபடுத்தக் கூடியவாறான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். நீங்கள் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள் என பலர் என்னிடம் வினவி இருக்கின்றார்கள்.

எனவே கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவ்வாறு கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கின்றேன்

அந்த வகையில் எதிர்வரும் 11 ,12 ம் திகதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சிகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முகமாக கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன் கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய அது செயற்படுத்தப்படும் .

இந்தத் தேர்தலில் தமிழரசு கட்சி எடுத்த தீர்மானத்தின் பின்னர் இளம் உறுப்பினர்கள் சிலர் எமக்கு தெரிந்த வகையில் வேறு கட்சிகளிலே சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதை அறிகின்றோம்.அப்படியானவர்கள் பற்றி தமிழரசு கட்சியில் மத்தியசெயற்குழுவில் பரிசீலிக்கவுள்ளோம். கட்சி மாறியவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளோம் என்றார்.

ad

ad