பிரான்ஸ் பொலிஸ் பிரிவில் முக்கிய பதவியில் இணைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் | Jaffna Boy Joint French Police Force

யாழ்ப்பாணத்தை சேர்ந்த  தமிழ் இளைஞர் பிரான்ஸ் காவல் துறை பிரிவில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார்.

பிரான்ஸில் தேசிய காவல் துறை  அதிகாரி டிப்ளோமா பட்டம் பெற்ற 175 பேருக்கான சான்றிதழ்களை உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.

 

இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த   தமிழ் இளைஞரான பெண்கலன் இதயசோதி தம்பதியினரின் மகனான பிராண்ட்போன்ட் காலன் காவல் துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் இவர் காவல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது