புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2023

8 கோடி தங்கத்துக்கு 7 கோடி அபராதமா? - இது எப்படி நியாயம்?

www.pungudutivuswiss.com

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையம்  ஊடாக  சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான   தங்கத்தை   கொண்டு வந்த நபருக்கு 7 கோடி  ரூபாய் அபராதம். ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.க்கு 75 இலட்சம் ரூபா அபராதம்.இது எந்த வகையில் நியாயம்  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   கேள்வி எழுப்பினார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த நபருக்கு 7 கோடி ரூபாய் அபராதம். ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம்




 எம்.பி.க்கு 75 இலட்சம் ரூபா அபராதம்.இது எந்த வகையில் நியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்தே கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கடமைப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ளன. எனினும், விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த தங்கம் மற்றும் அலைபேசிகளுடன் பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி. மீது ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை எனக் கேள்வியெழுப்பினார்.

ad

ad