கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், பின்னர் கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்களின் நீண்ட உரைகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாராளுமன்ற உரையாற்றவிருப்பதாகத் தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனை அடுத்து 12.30 அளவில் கூட்டம் நிறைவடைந்த போதும் தீர்க்கமான கலந்துரையாடல் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. |