அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர் நலன்புரி சங்கத்தினரின் விசேட கலந்துரையாடலில் வைத்தியசாலையின் உள்ளார்ந்த சுற்றுப்புறங்களில் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய துப்பரவு பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது . அதற்கமைய புங்குடுதீவு வாழ் பொதுமக்களின் பேராதரவுடன் எதிர்வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அனைவரும் வருகைதந்து முழுமையான ஆதரவினை வழங்குமாறும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்