ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் புதன்கிழமை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் போது இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 14.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இரு சக்கர வாகனத்தில் தங்கம் கொண்டு வந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |