புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2023

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

www.pungudutivuswiss.com


பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல, பொது பாதுகாப்பு அமைச்சரினால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அவர் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை.

குறிப்பிட்ட காலத்திற்குள் பாதாள உலக செயற்பாடுகளை அமைச்சரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என்றார்.

தற்போது எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாகவும் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கு தலைமைத்துவத்தை வழங்கி ஒரு மாதத்திற்குள் நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்த முடியாவிட்டால் அவரை இராஜினாமா செய்யுமாறு கோரவுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய நிலை தொடருமானால், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து பின்வரிசை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad