புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2023

பற்றி எரியும் இஸ்ரேல் : 22 பேர் பலி! போர் பிரகடனத்தை அறிவித்தது இஸ்ரேல்

www.pungudutivuswiss.com

இன்று சனிக்கிழமை காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு

நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இன்று திடீர் தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்தினர்.

இத்தாக்குதல்களால் டெல் அவிவ் உட்பட இஸ்ரேல் முழுவதும் பல நகரங்களில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன.

காசா பகுதியிலிருந்து பல பயங்கரவாதிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர். காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். 

இத்தாக்குதலில் இதுவரை 22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 250 பேர் காயமடைந்தாகவும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சிகிற்சை அளித்ததாகவும் இஸ்ரேல் அம்புலன்ஸ் சேவைக தெரிவித்துள்ளது.

காலை 6 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியதாகவும், இதில் பல கட்டடங்கள் தரை மட்டமானதோடு, ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக இறந்து கிடக்கும் காட்சிகள் வீடியோக்களாக பதிவிடப்பட்டு வருகிறது. 

பாலஸ்தீன போராளிகள் தெற்கு இஸ்ரேலின் எல்லை நகரமான ஸ்டெரோட்டை அடைந்து பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக உள்ளூர் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸின் இராணுவத் தலைவர் மொஹமட் டெய்ஃப், இஸ்ரேலிய அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிம்சாத் தோரா என்ற யூதர்களின் திருவிழாவின் போது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்னர்.

இத்தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர்ப் பிரகடனத்தை அறிவித்துள்ளது.

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகள் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

லெபனானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈரானை ஆதரவாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஹமாஸ் தாக்குதலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இஸ்ரேலின் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்க ஹமாசுக்கு தெய்வீக ஆதரவு இருப்பதாக அந்த இயக்கம் மேலும் கூறியுள்ளது.

ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பல அரபு நாடுகளால் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியாக உள்ள காசாவுக்கு இருநாடுகளும் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. பல ஆண்டுகளாக இருநாடுகளும் இந்த சம்பவம் தொடர்பாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தி வரும் நிலையில் இன்றைய தினம் மீண்டும் தாக்குதல் சம்பவமானது நடைபெற்றுள்ளது. 

பாலஸ்தீன பயங்கரவாதிகள் ஆயுதங்களோடு காசா பகுதிக்கு ஊடுருவியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் போர் பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 80 கி.மீ. அளவுக்கு இந்த பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் சில இடங்களில் ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் செயலிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பாலஸ்தீன படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவத்தினர் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹமாஸின் இராணுவப் பிரிவின்  தலைவரான முகமது டெய்ஃப் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், "ஆபரேஷன் அல்-அக்ஸா புயல்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் பொதுமக்களையும், இராணுவ வீரர்களையும் சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிலுக்கு இஸ்ரேல் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் இதுவரை 4 முறை நடைபெற்ற போரால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது அங்கு போர் பதற்றம் நிலவுவதால் இம்முறை பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 


ad

ad