புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2024

நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு.

www.pungudutivuswiss.com


தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது.
 இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்தது இடம்பெற்ற வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. ஆகியன புறக்கணித்த நிலையில் தமிழ் தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தது. அரச தரப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம், கஜேந்திரன் ஆகிய எம்.பி.க்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சாணக்கியன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம் , கோவிந்தன் கருணாகரம் ஆகிய எம்.பி.க்களுமே எதிர்த்து வாக்களித்தனர்.

இதேவேளை, இந்த விவாதத்தில் உரையாற்றும்போதே இந்த சட்ட மூலத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி. யுமான சரத் வீரசேகர வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

ad

ad