பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: அ தி மு க அணி 5 பேரும் தி மு க அணி சார்பில் ஒருவரும் டேஹ்ரிவு தே.மு.தி.க. தோல்வி
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து புதிய 6 எம்.பிக்களை தேர்ந்து எடுப்பதற்கு இன்று தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.
தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் களத்தில் இருந்தனர். 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக்குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜூனன் ஆகியோருக்கு தலா 36 வாக்குகள் கிடைத்தன. மற்றொரு அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு 35 வாக்குகள் கிடைத்தன.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு 34 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இந்த 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 22 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் தோல்வியடைந்தார்.
27 ஜூன், 2013
எதிர்வரும் சனி ஞாயிறன்று ஜூன் 29.30 ஆம் திகதிகளில் சுவிசில் நடைபெறவிருந்த மாவீரர் கிண்ண சுற்றுப் போட்டிகள் யாவும் காலநிலை மோசம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது
13வது திருத்தத்திற்கு எதிராக போராட தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்!- பிள்ளையான்
13வது திருத்தச் சட்டத்தை பலவீனமடையச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கெதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து போராடுவதற்குத்
கழக வளர்ச்சிக்கும், தேர்தலில் களம் காண்பதற்கும் என் பிறந்த நாட்களின்போதும் - மற்றும் மாநாட்டு நன்கொடை நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கும்போதும் - மாவட்டக் கழகங்கள் - மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி போன்றவை நிதி
கை,கால்களை வெட்டிக்கொன்று அம்பத்தூர் ஏரிக்கரையில் வீசப்பட்ட இளைஞர் அம்பத்தூரைச்சேர்ந்தவர் அனிதா. இவரது கணவர் சுரேஷ். நேற்று முன் தினம் சுரேஷ் அலுவலகம் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது
மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்
புதிய பிரபாகரனாக மன்னார் மாவட்ட ஆயர்: ஞானசார தேரர்
புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள் ளது.ஜூன் 8ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் மிகவும் சிரமப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வை இழந்த நிலையிலேயே பெரிதும் காணப்படுவதாக அவர்கள் கூறுவதாக அம்னஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட