புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

உலக கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா கால்பந்து‌ தொடர் நடக்கிறது.

இதன் லீக் போட்டியில் முன்னணி வீரர்களான மெஸ்சியின் பார்சிலோனா, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த ‌இப்போட்டியின் 7வது நமிடத்தில் பார்சிலோனா வீரர் இனியஸ்தா, முதல் கோல் அடித்தார். இதற்கு ரியல் மாட்ரிட் வீரர் கரீம் பென்சிமா(20, 24வது நிமிடம்) இரட்டை அடி கொடுத்தார்.
தொடர்ந்து போராடிய பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி(42) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை வகித்தன.
பின் விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது பாதியில், முதலில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (55வது நிமிடம்) கோலாக மாற்றினார். இதற்கு அடுத்ததடுத்து கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பார்சிலோனா வீரர் மெஸ்சி(65, 84) துல்லியமாக இரண்டு கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
இதன்பின் கடைசி வரை போராடிய ரியல் மாட்ரிட் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை, இதனையடுத்து பார்சிலோனா அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ad

ad