புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012


பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் இளம் பெண்கள்

இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தா அருகில் உள்ள டெபோக் நகரில் வசிக்கும் 14 வயது சிறுமியின் பேஸ்புக் நண்பர் ஒருவர், அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பேஸ்புக் மூலம் இந்தோனேசிய சிறுமிகளுக்கு வலை விரித்து, அவர்களை கடத்தி
பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.
அந்த நபர் ஸ்மார்ட்டாக இருப்பார் என்று நினைத்து, அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பேஸ்புக்கில் ஓகே சொல்லி விட்டார். அதன்பின் இருவரும் போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர்.
ஒருநாள் டெபோக் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வர சொன்னார் அந்த ஆசாமி. அங்கு சென்ற போது, 24 வயது நிரம்பிய அழகான வாலிபர் ஒருவர் இருந்தார்.
அவர் தனது பெயரை யோகி என்று கூறி சிறுமியிடம் அறிமுகம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசினர்.
மீண்டும் இருவரும் சந்திக்க ஒப்புக் கொண்டு, வானில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வான் ஒரு மணி நேர பயணத்துக்கு பின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள போகோர் என்ற இடத்துக்கு சென்றது.
அங்குள்ள தனி வீட்டில் சிறுமியை அடைத்தனர், அங்கு ஏற்கனவே 14 வயது முதல் 17 வயதுக்கு உட்பட சிறுமிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.
முதல் நாளில் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பலர் பலவந்தமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.
ஒரு வாரம் கழித்து, உன்னை விலைக்கு விற்று விட்டோம். படாம் என்ற தீவுக்கு கப்பலில் அழைத்து செல்வார்கள். கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
படாம் என்ற இடம் சிறுமிகளை வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் இடம். இங்கு சிங்கப்பூரில் இருந்து படகுகளில் வரும் ஆண்களுக்கு சிறுமிகளை இரையாக்குகின்றனர்.
பயங்கர சித்ரவதைகளுக்கு பிறகு எப்படியோ தப்பி வந்து அந்த சிறுமி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாள். அதன்பின் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் கூறுகையில், இந்தோனேசியாவில் காணாமல் போன 129 சிறுமிகளில், 27 பேர் பேஸ்புக் மூலம் அறிமுகமானவர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.

ad

ad