புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013


தேனி : அண்ணனை கொன்று ஆற்றில் வீசிய தங்கை 
தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் கருப்பையா(வயது 62) . ஜனவரி 8 ல் காணாமல் போன இவர், ஜனவரி 20 ல், சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பெரியாற்றில், உடலில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார். 


கருப்பையாவுக்கு நான்கு சகோதரர்களும், மூன்று சகோதரி களும் உள்ளனர். கருப்பையாவின் தாய், தனது சொத்துக் களான வயல், தோப்புகள், வீட்டை தனது மகள் ராதிகா,50, பெயரில் உயில் எழுதிவைத்துவிட்டு இறந்தார். 
ஆனாலும், ராதிகாவின் சகோதரர்கள் கருப்பையா, தர்மர், ராஜன் ஆகியோர் சில சொத்துக்களை தங்கள் வசமே வைத்து அனுபவித்து வந்துள்ளனர். சில சொத்துக்களை கேட்டு ராதிகாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். 
இதற்கு தலைமை ஏற்று கருப்பையா செயல்பட்டுள்ளார். சகோ தரர்களாகிய தங்களுக்கும் சொத்துக்களில் பாதியை கொடுக் குமாறு ராதிகாவிடம், பல மாதங்களாக கருப்பையா பேசி வந்துள்ளார். 
இதனால் ஆத்திரம் அடைந்த ராதிகா, கூலி படையை ஏவி கருப்பையாவை கொலை செய்து உடலை சாக்கில் கட்டி மார்க்கயன்கோட்டை பெரியாற்றில் வீசி சென்றனர். அபுதாஹிரின் மொபைலை கைப்பற்றிய போலீசார், அவர் அதிகமாக பேசிய நபர்களின் எண்களை கண்காணித்து, கூலிப்படை, திட்டம் தீட்டிய சகோதரி ராதிகா ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

ad

ad