புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013


மண்டைதீவு பகுதியில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட படையினனை தாக்கிய குடும்பஸ்தர் கடற்படையினரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்:

கடந்த சனிக்கிழமை இரவு குறித்த பொதுமகனது வீட்டிற்குள்ளே அடாத்தாக புகுந்த கடற்படை சிப்பாய் ஒருவர் வீட்டில் தனித்திருந்த பெண்களை பாலியல் ரீதியாக துனபுறுத்தியுள்ளார். அவ்வேளை தொழில் முடிந்து வீடு திரும்பியிருந்த ஜெ.காண்டீபன் எனப்படும் குறித்த குடும்ப தலைவர் அச்சிப்பாயை அடித்து விரட்டியுள்ளார். தப்பியோடிய குறித்த சிப்பாய் பின்னர் தனது சகபாடிகளுடன் சென்று காண்டீபனை முகாமிற்கு கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னர் ரோந்து சென்ற கடற்படையினரை தாக்கியதாக கூறி அவரை மண்டைதீவு பொலிஸாரிடம் கையளித்துமுள்ளனர். இந்நிலையில் காயங்களுக்கு சிகிச்சை பெறவென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காண்டீபன் பத்திரிகையாளர்களிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். தீவகப் பகுதிகளிலும் அதே போன்று குடாக்கடலை அண்டிய பகுதிகளிலும் இரவு வேளைகளில் தொழிலுக்கு ஆண்கள் கடலுக்கு சென்றுவிடும் நிலையில் தனித்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் கடற்படையினால் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad