புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013




          "நான் பாதுகாப்பான இடத்தில் தலைமறைவாக இருக்கிறேன்!' என அஞ்சலி சொன்னாலும் அவர் எந்த ஆபத் தும் இல்லாமல் திரும்பி வரவேண்டும்... என்கிற பதைபதைப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அஞ்சலி விஷயத்தில் சினிமா வி.ஐ.பி.க்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.nakeeran

அஞ்சலி க்யூட்டாகவும், குறும்பாகவும் இருப்பார். வெள்ளந்தியான முகத்தில் ஏகப்பட்ட எக்ஸ்பிரெஷன்கள் காட்டுவார். அதனால் அவரோடு பழகுகிறவர்களுக்கு அஞ்சலியை ரொம்பவே பிடித்துப் போகும்.

அதனால்தான் தனக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ஹிட்டடிக்க காரணமாக இருந்த அஞ்சலிக்கு தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் ஹைதரா பாத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கி பரிசளித்திருக்கிறார் என் கிறார்கள் ஆந்திர சினிமா வட்டாரத்தில்.

ஒரு அரசியல் வி.ஐ.பி. வீட்டு மரு மகன், பார்ட்ன ராக இருந்து தயாரித்த படத்தில் அஞ்சலி நடித்தார். அதன்மூலம் வி.ஐ.பி. மருமகனுக்கும், அஞ்சலிக்கும் இடையே நெருங்கிய நட்பு உண்டானது. மருமகன் அலுவலகத்தில் மருமகன் சேரில் உட்கார்ந்திருக்க... டேபிள் ஏறி உட்கார்ந்து அரட்டையடிப்பார் அஞ்சலி.

அம்புட்டு சகஜம்!

"அந்தப் பொண்ணுக்கு இவ்வளவு பிரச்சினையா?' என அதிர்ந்து விட்டாராம் அந்த மருமகன்.

கிளாமராக நடிக்க தயங்கி வந்த அஞ்சலி,  சுந்தர் சி. கேட்டுக் கொண்டதால் "கலகலப்பு' படத்தில் கிளாமராக நடித்தார். இதனால் தனது "மதகஜ ராஜா'விலும் அஞ்சலியை நாயகியாக்கினார். அப்புற மென்ன? சுந்தர்.சி.யையும், அஞ்சலியையும் இணைத்து கிசுகிசு வந்தது.

"அஞ்சலி நல்லா பழகுவார். பேசுவார். ஆனா ஒரு தடவை கூட தனக்கு குடும்ப பிரச்சினைகள் இருப்பதாக என்னிடம் சொன்னதில்லை. இந்தப் பிரச்சினைகள்லயிருந்து அவர் நல்லபடியா திரும்பி வரணும்!' என ஆர்யா நெகிழ்ந்திருக்கிறார்.

"தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் அஞ்சலியை குழப்புகிறார்' என அஞ்சலியின் சித்தி நிருபர் களிடம் சொல்லியிருக்கிறார். யார் அவர்? என நாம் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.

"சூர்யா நடித்து வரும் "சிங்கம்-2' படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார் அஞ்சலி.. இந்த வாய்ப்பைப் பேசி முடித்த "கோல்டு' மேனேஜர்தான் "நீங்க இன்னும் பெரிய அளவில் வரணும். உங்க திறமைக்கு பெரிய சம்பளம் வாங்கலாமே?' என சில ஆலோசனைகளைச் சொன்னாராம். அதிலிருந்தே சித்தியுடன் முரண்பட ஆரம்பித்து விட்டார்  அஞ்சலி' என்கிறார்கள்.

நமக்கு கிடைத்த தகவல்படி... 11-ந்தேதி மாலை தனது அண்ணன் ரவிசங்கரிடம் பேசிய அஞ்சலி "7-ந் தேதி நைட்... ஹோட்டல் ரூமில் வைத்து சித்தப்பா (சூரியபாபு) என்னை அடித்து விட்டார். அதனால்தான் காலையில் சொல்லாமல் கிளம்பி விட்டேன். பத்திரிகைகளிடமும் போன் செய்து புகார் செய்தேன். சித்தி மீது நீ கொடுத்திருக்கும் புகாரை வாபஸ் வாங்காதே! தகுந்த பாதுகாப்போடு உன்னை வந்து பார்க்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறாராம்.

கண்ணாமூச்சியை விட்டுட்டு வாங்கம்மா மின்னல்.

ad

ad