புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013

சென்னையில் பிரபல ரவுடி மர்மமான முறையில் படுகொலை
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(வயது 28).  குன்றத்தூர், போரூர், முகலிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் காவல்நிலையங்களில் இவர் மீது வழிப்பறி,
கொலை வழக்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று முன் தினம் வளசரவாக்கம் போலீசார் ஒரு விசாரணைக்காக ராஜனை காவல் நிலையம் வரும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். அந்த சம்மனை பெற்று ராஜன் காவல்நிலையம் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலையில் சென்ற ராஜன் மாலைவரை வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தனர்.    அப்போது அதே பகுதியில் உள்ள எஸ்.டி.எஸ். நகர் பகுதியில் உள்ள முள்வேலி புதரில் ஒரு சடலம் இருப்பதாக தெரியவந்தது.  
போலிசார் அங்கு சென்று பார்த்தபோது முகம் சிதைக்கப்பட்டு ராஜன் இறந்துகிடந்தார்.  அவர் அருகே  ஏராளமான பீர் பாட்டில்கள் கிடந்தன.  சில பாட்டில்கள் உடைக்கப்பட்டிருந்தன.  இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.  
போலீஸ் விசாரணைக்கு சம்மனில் சென்ற கொலையாகி கிடந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

ad

ad