புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2013

,

யாழில் தனியார் மற்றும் இபோச பஸ்கள் மோதி விபத்து! 20 பயணிகள் காயம்! 7 பேர் கவலைக்கிடம்
யாழ். புங்கன்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ் வண்டியுமே ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்குள்ளானது

ad

ad