புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2013

தமிழ் மக்கள் பிரிந்து போக இந்தியா உதவி செய்யும்! சிங்கள மக்கள் மத்தியில் அச்சம்! விக்னேஸ்வரன்
மாகாணசபைகளை நிறுவி பொலிஸ், காணி அதிகாரங்களை பிரயோகித்து, தமிழ் மக்கள் பிரிந்து சென்று விடுவார்கள். இவ்வாறு பிரிந்து போக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்ற அச்சமும் சிங்கள
மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.இதனாலேயே சீனாவை அரசாங்கம் நாடியிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் உரையாற்றுகையில்,
இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தமானது தனியொரு நாட்டினால் மட்டும் வலுவற்றதாக மாற்ற முடியாது. பன்னாட்டு ஒப்பந்தங்கள் சார்பான வியன்னா மாநாட்டு முடிவுகள் இதனை வலியுறுத்துகின்றன.
அவ்வாறு ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் வழக்கொழியச் செய்யப்பட வேண்டுமானால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பாரின் கலந்தாலோசனையின் பின்னே அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாகாணசபை சட்டத்திற்கு மேலதிகமாக அதிகரப் பரவலாக்கலை மேலும் விரிவடையச் செய்ய 1994ம் ஆண்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எதிர்தரப்பினரால் அது எதிர்க்கப்பட்டது.
அத்துடன் எமது இளைஞர்களிடையே நாட்டைப் பிரித்தல் என்ற குறிக்கோளும் இருந்த நிலையில் மேற்படி முன்னேற்றங்கள் எவையும் கருத்தில் எடுக்கப்படவில்லை.
மாகாணசபைகளை நிறுவி பொலிஸ், காணி அதிகாரங்களை பிரயோகித்து. தமிழ் மக்கள் பிரிந்து சென்று விடுவார்கள் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இவ்வாறு பிரிந்துபோக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்ற எண்ணமும் வலுப்பெற்றுள்ளது.
இதனாலேயே சீனாவை அரசாங்கம் நாடியிருக்கின்றது. ஆனால் இவை தொடர்பான சட்டம் அவ்வாறான தனிப்பட்ட பொலிஸ் படையினை உருவாக்கி அதனூடாக தனிநாடு ஒன்றினை ஏற்படுத்த இடமளிக்க கூடும் என்பது பொய்.
ஏனெனில் அரசாங்கம் முதலில் பொலிஸ் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும். அதன் பின்னர் இலங்கையின் பொலிஸ் அதிபர் மாகாண பொலிஸாரின் தலைவராக பிரதி பொலிஸ்மா அதிபரை நியமிக்க வேண்டும்.
எனவே மாகாணசபை பொலிஸ் படையினை அமைப்பது மத்திய அரசாங்கத்தின் அனுசரனையுடனேயே என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். மாகாண பொலிஸ் படை தான்தோன்றித்தனமாக நடந்துவிடக் கூடும் என்ற சந்தேகமும் பயமும் அஸ்திவாரமற்றவை.
வராதராஐப் பெருமாள் காலம் வேறு இன்றிருக்கும் காலம் வேறு. இந்திய சர்வதேச சமாதான படை இங்கு நிலைகொண்டிருந்தது. ஆனால் இன்று அவ்வாறான நிலையில்லை. நாங்கள் சகல பாதுகாப்புக்களையும் .இழந்த நிலையில் இருக்கின்றோம். எமது பாதுகாப்பை கருத்தில் கொண்டே மேற்படி பொலிஸ் அதிகாரம் மாகாணசபை சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது.
13ம் திருத்தச் சட்டத்தை நாம் பரிசீலித்துப் பார்க்கும் போது, மத்திய அரசாங்கத்தின் கையே மேலோங்கியுள்ளது இங்கே சமஸ்டி கருத்துக்களுக்கு இடமில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தம்மை தாமே ஆளும் நிலை என்பது வெகதூரத்தில் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad