வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஈ.பி.டி.பியினர் ஊர்காவற்துறையில் தாக்குதல்
மக்கள் வழங்கிய தேர்தல் தோல்வியை சகிக்க முடியாத ஈ.பி.டி.பியினர் தீவுப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன் அங்கு சென்று வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கஜதீபனும் அவரது நண்பர்களும் இன்று 28.09.2013 அனலைதீவுக்கு விஜயம் செய்து தனக்கு வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சந்திப்பு முடிந்து திரும்பி வரும் போது இன்று மாலை ஊர்காவற்துறை கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி யினரால் கற்களால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.