புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2013

ஈ.பி.டி.பி அமைப்பாளரின் கொலை வெறியாட்டம்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கான இரத்தினபுரம் அமைப்பாளரும் உழவுயந்திரச் சங்கத் தலைவருமான சிவகுமார் என்பவர் கூரிய கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி ரவிச்சந்திரன் (செல்வம்)  வயது 47 என்னும் குடும்பஸ்தரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இவர் படுகாயம் அடைந்த நிலையில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் தோல்வியின் எதிரொலியாக இச்சம்பவம் இடம்பெற்றமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ad

ad