புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2013

என்றோ ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம்!- கலா­நிதி தயான் ஜய­தி­லக
இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற தூக்­கு­மே­டையில் நிறுத்தும் மாநா­டா­கவே மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாடு அமையப் போகின்­றது. எனவே டேவிட் கம­ரூனின் கருத்­துக்­களை குறைத்து மதிப்­பி­ட­லா­காது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளhர்.
அர­சாங்கம் இப்­போ­தி­ருந்தே இதற்கு முகம் கொடுப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தயா­ராக வேண்­டு­மென்றும் இல்­லா­விட்டால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம் என்றும் அவர் எதிர்வு கூறி­யுள்ளார்.
இது தொடர்­பாக கலா­நிதி தயான் ஜய­தி­லக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் அச்­சு­றுத்­தலை நாம் குறைத்து மதிப்­பி­டவோ அல்­லது அதனை கணக்­கி­லெ­டுக்­காது இருக்கவோ கூடாது.
அவ­ரது கருத்தில் நவ­நீ­தம்­பிள்­ளையை இணைத்துக் கொண்டு இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான முழு ஆத­ர­வையும் பிரிட்டிஷ் வழங்கும் என்றும் கமரூன் தெரி­வித்­துள்ளார்.
2012, 2013 ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணையைப் போன்று 2014 ஆம் ஆண்டு அமையப் போவ­தில்லை. அது பயங்­க­ர­மா­ன­தாக அமையும்.
கடந்த ஆண்­டு­களில் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­க­ளா­னது 2016ஆம் ஆண்டில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள எம்மை சர்­வ­தேச விசா­ரணை என்ற தூக்கு மேடையில் நிறுத்­து­வ­தற்­கான முன்­னேற்­பா­டுகள் ஆகும்.
இலங்கை அர­சாங்கம் இதற்கு எதி­ராக தலை­கீ­ழாக நின்று அடம் பிடித்­தாலும் கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் எது­வுமே நடக்கப் போவ­தில்லை. மாறாக ஜெனீ­வா­வுக்கே வெற்றி கிடைக்கும். 2012, 2013 இல் வாக்­கெ­டுப்பு தோல்வி கண்­டது அப்ப­டி­யானால் 2014 இல் எவ்­வாறு வெல்­ல­மு­டி­யு­மென சிலர் கேட்­கலாம்.ஆணைக்­கு­ழுவில் எமது நட்பு நாடுகள் இருக்கின்­ற­னவே எனக் கூறலாம். அவ்­வாறு அங்கம் வகித்த நிலை­யி­லேயே 2012இல் தோல்வி கண்டோம்.
இம் முயற்­சி­யா­னது ஜனா­தி­ப­தி­யி­னதும் மக்­க­ளி­னதும் கண்­களில் மண்ணை தூவு­வது போலா­ன­தாகும்.இவ் ஆணைக்­கு­ழுவில் மீண்டும் எமது நட்பு நாடு­க­ளான 6 நாடு­களே அங்கம் வகிக்­கின்­றன.அதா­வது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீ­ரியா, சவூதி அரே­பியா அந் நாடு­க­ளாகும்.இந் நாடுகள் இருப்­பதால் வாக்­கெ­டுப்பில் எம்மால் வெல்ல முடி­யாது.
2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிர­தமர் கமரூன் அரசு டேவிட் மிலிபேண்ட் தலை­மையில் நவ­நீ­தம்­பிள்­ளையின் ஒத்­து­ழைப்­புடன் இதே போன்ற முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.அதன் போது அக் கூட்­ட­ணிக்கு 12 வாக்­கு­களே கிடை­த்தன. இலங்கைக்கு 29 வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. ஆனால் நான்கு வரு­டங்­க­ளுக்கு பிறகு என்ன நடந்­துள்ளது.
இலங்­கைக்கு நேர­டி­யா­கவே விஜயம் செய்த கமரூன் ஜெனீ­வாவில் இலங்­கையை தோல்­வி­ய­டையச் செய்வேன் என அச்சு­றுத்தல் விடுத்து சென்­றுள்ளார். இவ்­வா­றான நிலை­மைக்கு இலங்கை எப்­படித் தள்­ளப்­பட்­டது.
எமக்கு நட்பு நாடுகள் உள்­ளன எனக் கூறு­வது வெறும் எண்­ணிக்கை கணக்­காகும். கம­ரூனின் அச்­சு­றுத்தல் செயற்­படத் தொடங்­கினால் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
இம் மாநாட்டில் இலங்கை கலந்­து­கொள்­ளா­விட்­டாலும் தனித்து தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும். அத் தீர்­மானம் எவ்­வாறு அமையும் என்­பதை ஏற்­க­னவே தருஷ்மன் அறிக்­கையில் வெளியி­டப்­பட்­டுள்­ளது. அதுதான் தூக்கு மேடைக்­கான சர்வதேச விசா­ரணை என்ற தீர்ப்­பாகும்.
இத் தீர்ப்­புக்கு அமைய உலகின் பலம் பொருந்­திய நாடுகள் தத்­த­மது பாரா­ளு­மன்­றங்­களில் பிரே­ர­ணை­களை நிறை­வேற்றி பல்­வே­று­வி­த­மான பொரு­ளா­தார தடை­களை விதிக்க ஆரம்­பிக்கும்.
இதனால் மக்கள் கஷ்­டங்­க­ளுக்கு தள்­ளப்­ப­டு­வார்கள். வேலை­யில்லாப் பிரச்­சினை தலை­தூக்கும். அத்­தோடு பொருளாதாரத் தடை­களால் நாட்டு மக்­களின் வாழ்க்கை நடை­மு­றைகள் தலை­கீ­ழாக மாறும்.
அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே, 2009ஆம் ஆண்டு வெற்றி 2012, 2013 ஆண்­டு­களில் பெற்ற தோல்­வி­க­ளையும் பாட­மாகக் கொள்ள வேண்டும்.எதிர்­வரும் 4 மாதங்­களில் ஜெனீவா போராட்­டத்­திற்கு தீர்க்­க­மான ராஜ­தந்­திர ரீதியில் புத்திக் கூர்­மை­யுடன் காய் நகர்த்­தல்­களை அர­சாங்கம் நகர்த்த தயா­ராக வேண்டும்.இது தவிர்க்க முடி­யா­த­ சவா­லாகும்.
இந்த சர்­வ­தேச பொறி முறையால் நாம் பெற்ற வெற்­றிக்கும் கௌர­வத்­திற்கும் இழுக்கு ஏற்­படும்.இதனால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி நாடு உரு­வா­வ­தற்கு தேவை­யான சர்­வ­தேச மற்றும் தெற்­கா­சிய வல­யத்தின் எழுத்து மூல­மான நிபந்­த­னைகள் தயா­ராகும் நிலை உரு­வாகும்.
பொதுநலவாய மாநாட்டில் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பிலும் நாட்டுத் தலைவர் மற்றும் வடபகுதி தொடர்பில் வெளிக்காட்டிய செய்திகள் சாதகமற்றதாகவே காணப்பட்டன. இது இலங்கையின் எதிராளிகளுக்கு விருந்தாக அமைந்தது. கமரூனின் யாழ். விஜயம் தமிழ் இனவாத சக்திகளின் பரம்பலுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளார்.

ad

ad