புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2013

தமிழா் பெயரில் இருக்கும் கருங்காலிகள்
• மாநாட்டுக்கு பணம் வழங்கிய “லைக்கா”அல்லிராஜா

நடிகை திரிசாவை அழைத்து மானாட மயிலாட நடத்தியவர்!

மகனின் பிறந்த நாளுக்கு நடிகர் சிம்புவை அழைத்தவர்!

இளையராசாவை அழைத்து பெரும் செலவில் கச்சேரி நடத்தியவர்!

தற்போது மாநாட்டுக்கு மகிந்தவிடம் பணம் கொடுத்துள்ளார்!

இவர் ஒரு இலங்கை தமிழர். அதுவும் வன்னியைப் பிறப்பிடமாக கொண்டவர். இவர் தமிழ் மக்களிடமே தனது வியாபாரத்தை ஆரம்பித்தவர். புலத்தில் தமிழ் மக்களிடம் உழைத்த பணத்தை அநியாயமாக ஆடம்பரமாக தமிழ் இனத்திற்கு விரோதமாக செலவு செய்கிறார. இதை நான் கடந்த எனது பதிவுகளில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அப்போது அவரது கைக்கூலிகள் சிலர் அவர் தமிழ் மக்களுக்கு நிறைய உதவி செய்கிறார் என்றும் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தக் கூடாது என்றும் எழுதினார்கள். அவருடைய நிறுவனத்தில் பணி புரிந்த அவரால் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் இவரை அம்பலப்படுத்துமாறு தொடர்ந்து கேட்டு வந்தனர். அவர்கள் பல ஆதாரங்களையும் தர முன்வந்தார்கள்.

இலங்கையில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என பல தலைவர்களை நாடுகளை தமிழ் மக்கள் கேட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் மாணவர்கள் இளைஞர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் முன்னனி நிறுவனமான அதுவும் இலங்கை தமிழரின் நிறுவனமான “லைக்கா” கம்பனி மகிந்தவின் மாநாட்டுக்கு பண உதவி வழங்கிய செய்தி தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“லைக்கா” முதலாளி அல்லிராஜா மாநாட்டுக்கு பண உதவி செய்தது மட்டுமல்ல இலங்கையில் மகிந்தவுடன் சேர்ந்து பண முதலீடு செய்யவுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஏற்கனவே அவர் மகிந்த குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகளை லைக்கா முதலாளி இதுவரை மறுக்கவில்லை என்பதோடு அதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறார்.

இவரது இந்த தமிழ் இன விரோத செயற்பாடுகள் நன்கு தெரிந்தும் பல ஊடகங்கள் அவரது விளம்பர வருமானத்திற்காக வாய் திறக்க மறுக்கினறன.

லைக்கா முதலாளி அல்லிராஜா ஒரு இலங்கை தமிழர். அதுவும் வன்னி தமிழர். அவரது வன்னியில் குழந்தைகள் உணவின்றி தற்கொலை செய்கின்றனர். இளம் பெண்கள் வாழ வழியின்றி பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஆனால் புலத்தில் தமிழ் மக்களை வைத்து உழைத்து சம்பாதித்த பணத்தை அவர் தமிழர்களைக் கொன்ற மகிந்த கும்பலுக்கு உதவுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.

இவர் தொடர்ந்தும் இவ்வாறு திமிராக, பொறுப்பற்றுச் செயற்படுவாரேயானால் தமிழ் மக்கள் இவரை புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.

ad

ad