புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

பணிபெண் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு; எம்.பி. மனைவியிடம் போலீசார் விசாரணை
புதுடெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனன்ஜெய் சிங் வீட்டில் வேலை செய்து வந்த பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பணிப்பெண்ணின் உடலில், தலை, மார்பு, வயிறு
மற்றும் கைகளில் படுகாயம் காணப்படுவதாக போலீசார் கூறியுள்ளனர். வேலைக்கார பெண் திங்கள்கிழமை காலை இறந்துள்ளார். ஆனால் இரவு 8 மணிக்கே தகவல் வெளியே தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் இறந்ததற்கான காரணம் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் உடலில் காயங்களுடன் மரணம் அடைந்தது தொடர்பாக தனஞ்ஜெய் சிங்கின் மனைவி ஜக்ரிதி சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முறைப்படி அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
எம்.பி.யின் வீட்டில் இறந்த பெண் கடந்த 10 மாதங்களாக பணி புரிந்து வந்துள்ளார். இது தொடர்பாக எம்.பி.யின் வீட்டில் பணி புரிந்து வந்த மற்றவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். எம்.பி. தனன்ஜெய் சிங் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டவர்.

ad

ad