யாழ்.சென்.பற்றிக்ஸுக்கு விஜயம் செய்த கிரிக்கெட் வீரர் சங்ககார
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.
அகில இலங்கை ரீதியில் நல்லிணக்கத்திற்கான முரளி வெற்றிக் கிண்ண இருபது - 20 போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. இது வட மாகாணத்தின் ஐந்து இடங்களில் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உற்சாகப்படுத்துவதற்காகவே குமார் சங்கக்கார வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.