புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014


ஊர்காவற்துறை முன்பள்ளிக்கு வடமாகாண சபை உறுப்பினர் கஐதீபனால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஒழுங்குபடுத்தலில்  புலம்பெயர் நாட்டில் வhழும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நிதியுதவியில், ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள மெலிஞ்சிமுனை முன்பள்ளிக்கு ரூபா 25,000 பெறுமதியான கற்றல் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்படடுள்ளது.

மெலிஞ்சிமுனை பங்குத்தந்தை வணபிதா மரியதாஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் கட்சியின் தீவகச்செயற்பாட்டாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஊர்காவற்றுறை,  நரையாம்பிட்டி தீவில் அமைந்துள்ள யாத்திரை தலமான புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் இன்று மாலை விஜயம் மேற்கொண்ட வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தேவாலயம் அமைந்துள்ள தீவின் மண்ணரிப்பினைத் தடுப்பதற்கும், தீவினை அழகுபடுத்தவும் சுமார் 500 சவுக்கு மரக்கன்றுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார். 
 

ad

ad