புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?
ப: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.மு.க.அழகிரி பேட்டி
நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்து இருப்பதாக கூறிய அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:


கேள்வி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவாக இருந்து இருப்பாரா?
பதில்: அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
கே. ஏன் உங்களை கட்சியை விட்டு நீக்கினார்கள்.?
ப: தலைவர் கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.
கே.பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?
ப: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.
கே:.அப்போது யார் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்?
ப: எனக்கு ஜோசியம் சொல்லத் தெரியாது.
கே. தனிக்கட்சி தொடங்குவீர்களா?
ப: தனிக்கட்சி தொடங்க மாட்டேன். தி.மு.கவில் தான் இருப்பேன். தலைவர் கலைஞர்தான் எனக்கு தலைவர். தி.மு.க. கரை போட்ட வேட்டி தான் கட்டுவேன்

ad

ad