புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

பந்துவீச்சில் புது யுக்தி: அஸ்வின்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இனி முழுக்கை சட்டை அணிந்து பந்துவீசப் போவதாக தெரிவித்துள்ளார்.

இவர் மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பாணியில் பந்து வீசப்படுவதாக பேசப்படுகிறது.
இதுகுறித்து மிர்புரில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அஷ்வின், தனது பந்து வீச்சில் சில மாற்றங்களை கொண்டு வர விரும்புவதாகவும், இதற்காக முழுக்கை சட்டை அணிந்து விளையாட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சில ‘ஆப்–பிரேக்’ பந்து வீச்சாளர்கள் சில புதுமைகளை கொண்டு வந்ததன் மூலம் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், மேலும் முழங்கையின் வளைவு சற்று கூடுதலாக இருந்தாலே அதிகமான நன்மைகள் கிடைப்பதாகவும், மற்ற பந்து வீச்சாளர்கள் இச்செய்கையில் சிறந்து விளங்கும் போது நான் மட்டும் ஏன் இதை தவிர்த்துவிட்டு பின் தங்கி இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை சுழற்றும் போது, முழங்கை அளவை கணக்கிடுவார்கள். இது 15 டிகிரிக்கு அதிகமாக இருந்தால் பந்து வீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்படும். இத்தகைய தடைகள் இருப்பினும் அஷ்வினின் இந்தக் கருத்து பலரையும் வியப்படையச் செய்துள்ளது.

ad

ad