தம்பாட்டி கிராமத்திற்கு குடி நீர் வழங்க சரா எம்.பி. நிதியுதவி
ஊர்காவற்றுறை, தம்பாட்டி கிராமத்திற்கு 9 கிழமைக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் வழங்கியுள்ளார்.
நீர் வழங்கலுக்காக 58 ஆயிரம் ரூபாவினை தம்பாட்டி கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் கையளித்தார்.