யாழ்.கசூரினா கடலில் மூழ்கிய வயோதிபர் சாவு
யாழ். காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - கொழும்பு வீதியைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் (வயது 66) என்ற வயோதிபர் இன்று உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற மேற்படி வயோதிபர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறிய நிலையில் காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் வயோதிபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.