புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014

தம்பிதுரைக்கு வைகோ வாழ்த்து!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்திய நாட்டு அரசியலில் மிக முக்கியமான காலகட்டத்தில், அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்தலைவரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான மு. தம்பிதுரை அவர்கள், நாடாளுமன்ற மக்கள் அவையின் துணைத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

1985 முதல் 89 வரையிலும் அவர் இப்பொறுப்பை வகித்தபோது, அனைத்துக் கட்சியினரும் பாராட்டும் விதத்தில் செயல்பட்டார்.

தற்போதைய நாடாளுமன்ற மக்கள் அவையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மிகக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகள் என அனைத்துத் தரப்பினருடைய ஜனநாயக உரிமைகளைப் போற்றும் வகையிலும், நன்மதிப்புப் பெறும் விதத்திலும் தான் வகிக்கும் பொறுப்பைத் திறம்படச் செயல்படுத்துவார் என்ற நிறைந்த நம்பிக்கையோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்! இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

ad

ad