புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

ரொனால்டோவின் கிறிஸ்மஸ் பரிசு




கால்பந்து அரங்கில் முன்னணி வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் கிளப் அணி வீரர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.


போர்த்துக்கல் கால்பந்து அணி கப்டன் கிறிஸ்ரியானோ ரொனால்டோ (29 வயது) 2009 ஆம் ஆண்டு கிளப் அணியான ரியல் மாட்ரிட்டில் இணைந்தார். தேசிய அணிக்காக ‘பிபா’ உலகக் கிண்ணத் தொடரில் சொதப்பியபோதும் கிளப் போட்டிகளில் பெரியளவில் சாதித்து வருகிறார்.


சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில், ரியல் மாட்ரிட் அணி 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார்.


இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்து 5 ஆண்டுகளான மகிழ்ச்சியில் உள்ளார் ரொனால்டோ. இந்தப் பயணத்திற்கு உதவிய சக வீரர்களை கௌரவப்படுத்த முடிவு செய்தார்.


இதற்காக ஒவ்வொரு வீரருக்கும் 14 இலட்சம் ரூபா மதிப்புள்ள கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்தக் கடிகாரத்தின் உள்ளே ஒவ்வொரு வீரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ‘லா டெசிமா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.


‘ஸ்பானிஸ்’ மொழியில் ‘டெசிமா’ என்றால் பத்து என அர்த்தம். அதாவது 10 ஆவது முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் கிண்ணம் வெல்ல உதவியதற்கு நன்றி என அர்த்தமாம்.


ரியல் மாட்ரிட் அணி வீரர் அல்வாரோ இந்த கைக்கடிகார புகைப்படத்தை சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்டுள்ளார். இது தங்களுக்குக் கிடைத்த கிறிஸ்மஸ் பரிசாக அந்த வீரர்கள் எண்ணுகிறார்கள்

ad

ad