புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2014


ரஜினி ரசிகர்களின் புதிய கட்சி 

ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார்கள். திருப்பூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் என்ற சங்கத்தை கடந்த 1990-ம் ஆண்டு உருவாக்கினார்கள். இதன் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ். 

ரஜினிகாந்தின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், ரஜினிகாந்த் புதிய படம் தியேட்டரில் திரையிடும்போதும் இந்த அமைப்புகள் சார்பில் விழா கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்த நிலையில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் நடந்தது. 

திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்பட 14 மாவட்டத்தைச் சேர்ந்த மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் ‘சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி அறிவிக்கப்பட்டது. 

இந்த கட்சியில் ரஜினிகாந்தின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்துவது இல்லை என்றும், ரஜினிகாந்தின் பெயருக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தாமல் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.முருகேஷ் நியமிக்கப்பட்டார். கட்சியின் கொடியை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வெளியிட்டார். நீலம், வெள்ளை, சிவப்பு நிற கொடியின் மத்தியில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இதில் காந்திஜி, நேதாஜி, பெரியார், காமராஜர் படம் அச்சிடப்பட்டு உள்ளது. 

ad

ad