புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2014

அலரி மாளிகையை சுற்றி வளைத்து மஹிந்தவை வெளியேற்றுவோம்: விக்ரமபாகு
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் பின்னர், அலரி மாளிகையை சுற்றி வளைத்து மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவோம் என புதிய இடதுசாரி முன்னணயின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
ஒருவருக்கு ஒருவர் நல்ல நம்பிக்கையுடன் செயற்படுகின்றனர். எனவே, மைத்திரிபால வெற்றியீட்டினால் பிரதமர் பதவி வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கின்றேன்.
மைத்திரிபால சிறிசேன ஓர் புரட்சியாளராகவே செயற்பட்டு வருகின்றார்.
ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிராக போராடப் போவதாக மைத்திரிபால தெரிவிக்கின்றார்.
வெற்றியீட்டியதன் பின்னர் மக்களுடன் இணைந்து அலரி மாளிகையை சுற்றி வளைத்து மஹிந்தவை வெளியில் எடுப்பேன் என மைத்திரிபால குறிப்பிடுகின்றார்.
மைத்திரிபாலவின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது. தேர்தலின் பின்னர் மைத்திரிபால மாற்றங்களைச் செய்வார் என நம்புகின்றோம் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ad

ad